வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அடுத்த வாரம் முதல் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இன்று அறிவித்துவிட்டார்.
எனவே, தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கோடைக்கு முன்பாகவே கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் களைத்துப் போய் ஓய்வெடுப்பார். அதனால், தேர்தல் முடிந்து ஏப்ரல் மாதமும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அடுத்து மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதற்குப் பிறகு மட்டுமே அவரால் 'இந்தியன் 2, விக்ரம்' படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும். 'இந்தியன் 2' படப்பிடிப்பு கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் இயக்குனர் ஷங்கர் தெலுங்குப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு கமல்ஹாசன் முன்னுரிமை கொடுப்பார் என்பது தெரிய வரும்.