இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
துல்கர் சல்மான் மலையாளத்தில் தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான், இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு சல்யூட் என டைட்டில் வைத்து சமீபத்தில் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானின் போலீஸ் கெட்டப்பில் செகன்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அரவிந்த் கருணாகரன் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதையும் அறிவித்துள்ளனர். இந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான்..