தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரின் சம்பளத்தை அவர் கடந்துவிட்டார். 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து 2023ம் ஆண்டில் 'சலார்' படத்தை இயக்கி வரும் 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளாராம்.
சில வருடங்களுக்கு முன்பே பெரிய தொகை ஒன்றை அவர் பிரபாஸிடம் அட்வான்ஸாக கொடுத்திருந்தாராம். சரியான இயக்குனர் கிடைக்காத காரணத்தால் அப்படம் தள்ளிக் கொண்டே வந்ததாம். இப்போது பிரஷாந்த் நீல் தான் சரியான இயக்குனர் என பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அந்தப் படமும் மற்ற படங்களைப் போல 'பான் இந்தியா' படமாகத்தான் உருவாகப் போகிறதாம்.