இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ்த் திரையுலகை புதிய இளமைப் புயல் ஒன்று அடுத்த மாதம் தாக்க வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாக உள்ள ராஷ்மிகா மந்தானா தான் அந்தப் புயல்.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனது துறுதுறு நடிப்பால் எண்ணற்ற இளம் ரசிகர்களைப் பெற்றவர் ராஷ்மிகா. இன்று சென்னையில் நடைபெற்ற 'சுல்தான்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தட்டுத் தடுமாறி தமிழில் பேசினார். அவர் பேசுவது புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன அவர் பேசும் போது சிரிப்பதையே ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்ல, வந்ததிலிருந்து கிளம்பும் வரை துறுதுறுவென அவர் இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நஸ்ரியா நசீம் வந்தார். சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.
அவரது வரிசையில் வர உள்ள ராஷ்மிகா இன்று பேசும் போது, தயாரிப்பாளர் பிரபுவிடம் அடுத்த படமும் சைன் பண்ண ரெடி என இப்போதே அவரது தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தமிழ் மக்களை காதலிக்கிறேன். சுல்தான் படம் புதிய அனுபவமாக இருந்தது என்றார்.
சீக்கிரமே ராஷ்மிகாவின் அடுத்த தமிழ்ப் பட அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.