ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி இருவருக்கும் இடையில் இருந்து கொண்டு அவர்களுக்கு நிகரான வெற்றியையும், வசூலையும் கொடுத்தவர் ராமராஜன். இன்று வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற உறுதியோடு இருக்கிறார்.
சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் வந்துவிட்ட அவர் வாழ்வில் நிறைய ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டார். சமீபத்தில் அவரை கொரோனா தாக்கியது. அதன் கொடூர பிடியில் இருந்தும் தப்பி வந்து விட்டார். இப்போது அவர் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக திரைக்கதை எழுதும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராமஜான் மீண்டும் இயக்குனராக களம் இறங்குகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛நான் ஹீரோவாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி இருக்கிறேன். 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும். சினிமாவில் பெண்களை மதித்தவன். அதுபோல் அரசியலில் நான் கடைசி வரை ஜெயலலிதா அம்மாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன'' என்கிறார் ராமராஜன்.