'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவருடைய அடுத்த படம் பற்றிய விவாதத்தில் தற்போது இருந்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் சமூக வலைத்தளங்களுக்கு வந்துவிட்டார்கள். இருந்தாலும் சிலர் இன்னும் அந்தப் பக்கமே வராமல் இருக்கிறார்கள்.
தற்போது புதிய வரவாக இயக்குனர் பாலா டுவிட்டர் பக்கம் வந்திருக்கிறார். அவருடைய முதல் டுவீட்டாக முதல்வரைப் பாராட்டி கடிதம் எழுதி அதன் மூலம் டுவிட்டரில் தன் முதல் பதிவை இட்டிருக்கிறார்.
“தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிப்பதைத் தவிருங்கள்,' என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம், நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்,
கோனோக்கி வாழுங் குடி,” என்ற குறளுடன் தன் பாராட்டு மடலைப் பதிவிட்டிருக்கிறார்.