தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் எஸ்ஜே சூர்யா இயக்கி, நாயகனாக நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. அதன்பின் 'மருதமலை, காளை, ஜகன்மோகினி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரத்திற்குள் அவருடைய உறவினர்கள் இருவரை அடுத்தடுத்து இழந்துவிட்டார். “மற்றுமொரு கசின் இன்று இறந்துவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் எனது குடும்பத்தில் இரண்டு உறவினர்கள் இறந்துவிட்டார்கள். இப்படி பயனில்லாத, உதவ முடியாத நிலையை பார்ப்பேன் என நினைக்கவில்லை. மனமும், உடலும் மரத்து போவதால் கோபம் கூட மறைந்துவிடுகிறது. இன்னும் எவ்வளவைப் பார்க்க வேண்டும்,” என பத்து நாட்களுக்கு முன்பு டுவீட் செய்துள்ளார்.
அதிலிருந்து தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உதவி செய்யும் விதத்தில் பல டுவீட்டுகளைப் பதிவிட்டு வருகிறார். நேற்று இன்னும் கோபமாக, “மருத்துவமனையில் பெட் கிடைக்காமலும், சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமலும், வாழ முடியாமல் இருக்க நான் எதற்காக 18 சதவீத ஜிஎஸ்டியைக் கட்ட வேண்டும், அதை நீக்குங்கள்,” எனப் பதிவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாஜக ஆகியோரை டேக் செய்துள்ளார்.