தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை டுவிட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.
அதில், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் இப்போது கட்சியில் இருந்து வெளியேறும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் விலகியிருப்பீர்களா? என்று கமல் கட்சியில் இருந்து வெளியேறிய மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மப்பிரியா ஆகியோரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் சனம்.
அதோடு, கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என்றும் அவரை பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.