கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
கொரோனா தொற்று பரவலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. இதனால் நோயை கட்டுப்படுத்த அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் சினிமாத்துறையில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இனிமேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திரையுலகினர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், ரஜினிகாந்த், நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேசும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.