தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பார்த்திபன் அவ்வப்போது தனது பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் கமெண்டுக்கும் பதிலளித்து வருகிறார். தற்போது தனது டுவிட்டரில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்பதை கூறும் வகையில், ‛‛நாளை சிரிக்க சிறக்க இன்றும் உள்ளிருப்போம் உறவே'' என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர், ‛உள்ளிருந்தால் உணவு யாரு தருவாங்க?' என்று ஒரு நெட்டிசன் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பார்த்திபன், ‛‛சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தால் உணவை உண்ண நாம் இருப்போம். நாளை இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்'' என்று அந்த நபருக்கு நச் பதில் கொடுத்துள்ளார் பார்த்திபன்.