சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின. இந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் லிங்குசாமி.
ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்திற்காக, வலுவான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள லிங்குசாமி, அதில் நடிகர் மாதவனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மாதவனின் திரையுலக பயணத்தில் கமர்ஷியல் அந்தஸ்து கொடுத்து அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது லிங்குசாமி இயக்கிய ரன் படம் தான். அதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்திலும் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார் மாதவன்.
லிங்குசாமியின் நட்புக்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.