மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா |
தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) இயங்கி வருகிறது. இதில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக தற்போது சண்டை இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்குவார் தங்கம் இருக்கிறார்.
இந்த நிலையில் பாலசுப்ரமணியம் என்பவர் கில்டு பெயரிலேயே ஒரு சங்கம் தொடங்கி, அதன் பெயரில் வங்கி கணக்கு ஒன்றையும் தொடங்கி, கில்டு சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்தி, வருவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாக்குவார் தங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜாக்குவார் தங்கம் தலைமையில் இயங்கும் சங்கமே கில்டு பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபரும் கில்டு சங்கத்தின் பெயரையும், சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து தீர்ப்பு நகலுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாக்குவார் தங்கம் அதில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கம் தான் உண்மையான சங்கம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு சில நபர்கள் கில்டு சங்க பொறுப்பில் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு சங்கத்திற்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் பல பொய்யான தகவல்களை பரப்பி, உறுப்பினர்களிடம் பணமோசடி செய்து ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.