கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
மணிரத்னம் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் உள்ளடங்கிய 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. அதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் ஒன்று. இதற்கு கிதார் கம்பி மேலே நின்று என டைட்டில் வைத்துள்ளார்கள். வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த குறும்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சூர்யா ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்தப்படத்தின் புகைப்படம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமான கவுதம் மேனன் பட பாணியில் ரொமாண்டிக் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது என்பது, சூர்யாவை பிரயாகா மார்ட்டின் காதல் பொங்கும் பார்வையில் பார்க்கும்போதே தெரிகிறது.