3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் காரைக்குடி, மதுரையில் நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், ஜூலை 13 முதல் மீண்டும் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார். அதோடு, நீண்ட இடைவேளைக்குப்பிறகு கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை(ஜூலை 16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.