மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தாலஜி படம் நவரசா. இதில் இன்மை என்ற கதையில் சித்தார்த்தும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இருவரும் ஆன்லைனிலேயே காட்சிகளை நடித்து ஒத்திகை செய்துள்ளனர். இந்த தகவலை பார்வதி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது எனக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
சித்தார்த்தும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஜூம் கால் மூலம் ஆன்லைனில் பேசி காட்சி மற்றும் நடிப்பு குறித்து ரிகர்சல் செய்து கொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்கல் இன்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நடந்ததற்கு நாங்கள் ஆன்லைன் மூலம் செய்து கொண்ட ரிகர்சல் முக்கிய காரணமாக இருந்தது. என்றார்.