தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தாலஜி படம் நவரசா. இதில் இன்மை என்ற கதையில் சித்தார்த்தும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இருவரும் ஆன்லைனிலேயே காட்சிகளை நடித்து ஒத்திகை செய்துள்ளனர். இந்த தகவலை பார்வதி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது எனக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
சித்தார்த்தும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஜூம் கால் மூலம் ஆன்லைனில் பேசி காட்சி மற்றும் நடிப்பு குறித்து ரிகர்சல் செய்து கொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்கல் இன்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நடந்ததற்கு நாங்கள் ஆன்லைன் மூலம் செய்து கொண்ட ரிகர்சல் முக்கிய காரணமாக இருந்தது. என்றார்.