பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய 'த பேமிலி மேன் 2' வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள வெப் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அத்தொடரில் ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரில் இலங்கைத் தமிழர்களையும், போராட்டங்களையும் தவறாக சித்தரித்ததாக இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே மீது குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்கள், சில அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் அத் தொடருக்கு எதிராக கண்டனை அறிக்கை வெளியிட்டன.
'த பேமிலி மேன் 2' தொடரைப் புறக்கணிக்க வேண்டும், அத்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோரைப் புறக்கணிக்க வேண்டும், அமேசான் ஓடிடி தளத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள்.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விஜய் சேதுபதி தற்போது அந்த இயக்குனர்களுடனேயே கூட்டணி சேர்ந்து ஒரு புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பயோபிக் படமான '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருன் வெளியானது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது அதேபோன்று இலங்கைத் தமிழர்களைத் தவறாக சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இயக்குனர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.