தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஓடிடி தளங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் விஸ்வரூபமெடுத்த பிறகு முன்னணி இயக்குனர்களின் பின்னால் தான் அந்த நிறுவனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் இயக்கிய ஆந்தாலஜி படங்களை வெளியிட்டன, அவர்கள் இயக்கிய திரைப்படங்களுக்கு பெரிய விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன.
ஓடிடி தளங்கள் தங்களைப் போன்ற இயக்குனர்களை நம்பி இருக்கின்றன என்பதை உணர்ந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் இணைந்து 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.
அந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளைத் தயாரிக்க உள்ளார்களாம். முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட இயக்குனர்களில் சிலர் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருபவர்கள். சிலர் ஆரம்பித்து பெரும் நஷ்டம் அடைந்தவர்கள்.
வேறு எந்த திரையுலகிலும் இப்படி ஒரு முயற்சி நடந்ததில்லை. இந்த நிறுவனம் சிறப்பாக நடந்தால் அது மற்ற திரையுலகினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.