இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து சில பான்-இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்', சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 1', ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
'ராதே ஷ்யாம்' படம் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவித்துவிட்டார்கள். இன்று 'புஷ்பா 1' படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் பாகத்தை 2022 அல்லது 2023ம் ஆண்டு வெளியிட உள்ளார்கள்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'புஷ்பா 1' படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்துபவராக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகர் பகத் பாசில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.