வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து சில பான்-இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்', சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 1', ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
'ராதே ஷ்யாம்' படம் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவித்துவிட்டார்கள். இன்று 'புஷ்பா 1' படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் பாகத்தை 2022 அல்லது 2023ம் ஆண்டு வெளியிட உள்ளார்கள்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'புஷ்பா 1' படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்துபவராக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகர் பகத் பாசில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.