ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நபராக எலிமினேட் ஆகி வருகின்றனர். இதன் காரணமாக மீதமிருக்கும் நபர்களுக்கு தாங்கள் எலிமினேட் ஆகி விடுவோமோ என்ற பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழுக்களாக பிரிந்து சண்டைகளும் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் தலைவராக இமான் அண்ணாச்சி தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால், நிரூப் தனது சலுகையை பயன்படுத்தி வீட்டின் தலைவராக மாறிவிட்டார். நிரூப் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்ன அண்ணாச்சி தோல்வி பயத்தால் நிரூப்பை வாயா போயா என்று பேசிவிட்டார். மேலும், 'பவரை அவங்க மிஸ் யூஸ் பண்ணுவாங்க. இதை வச்சு பழி வாங்குவாங்க' என்று இமான் அண்ணாச்சி பேசியுள்ளார். நிரூப்பின் தலைமையை ஏற்க விரும்பாத வருண் அண்ணாச்சி டீமில் சேர்ந்து ஓவர் பெர்பார்மென்ஸ் செய்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகாமல் இருக்க போட்டியாளர்கள் அனைவரும் தற்போது மக்களின் ஓட்டுகளையே நம்பி வருகின்றனர். எனவே அதிக ஓட்டுகளை வாங்குவதற்காக முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். தோல்வி பயம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பது போல பிக்பாஸ் வீட்டில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.