இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மியூசிக் சேனல் ஒன்றில் 'கட்டம் என்ன சொல்லுது' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் அனன்யா. அதன்பின் கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் மஹாலட்சுமியே என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பலரும் அறிந்த பிரபலமாக உருவெடுத்தார். இவரது சிரித்த முகத்திற்கும் கலகலப்பான பேச்சுக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சீரியல் முடிந்து விட்ட நிலையில் பலரும் அனன்யாவின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டினை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அனன்யாவோ தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன் என டாட்டா காட்டிவிட்டார்.
அனன்யா, தமிழ் என்பவரை காதலித்து வருகிறார். தமிழ் ஆஸ்திரேலியாவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். லவ் கம் அரேன்ஜ் மேரேஜாக மாப்பிள்ளையின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சியில், அனன்யா-தமிழ் திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது. கல்யாணத்தை சிம்பிளாக ப்ளான் செய்ததால் அனன்யா தனது மீடியா நண்பர்களை அழைக்கவில்லையாம். ஆனால், அவரது திருமண புகைப்படங்களும், மாலை மாற்றும் விளையாட்டும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின் அனன்யா ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் இனி அவர் பிறகு நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.