ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சில தினங்களுக்கு முன் இணையத்தில் நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் அவர் கன்னத்தில் நான்கு விரல்களின் தடம் பதிந்திருப்பதையும், கன்னம் வீங்கியிருப்பதையும் பார்த்து பலரும் பதறிப்போனார்கள். நடிகை குஷ்புவும் அதற்கேற்றார் போல் #ஸ்டேன்ட்வித்மீ, #ஸேநோடூவைலன்ஸ், #ஸ்பீக்அப்நவ் ஆகிய ஹாஸ்டாக்குகளை போட்டிருந்தார். இதனால் பலரும் குஷ்புவுக்கு ஏதோ அநீதி நிகழ்ந்துவிட்டதாக அவரை நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அது தொடர்பில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
உண்மையில் குஷ்புவை யாரும் அடிக்கவில்லை. அவர் புதிதாக நடிக்கும் சீரியலுக்கான புரோமோஷனுக்காக தான் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். குஷ்பு, கலர்ஸ் தமிழ் சேனலுக்காக புதிதாக நடித்து வரும் சீரியல் மீரா. இதில் ஆணாதிக்க சிந்தனையுள்ள கணவரிடம் இருந்து பிரிந்து சென்று சொந்தக்காலில் ஜெயித்துக்காட்டும் பெண்ணாக குஷ்பு நடிக்கவுள்ளார். மேலும், இந்த சீரியல் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கேள்வி கேட்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.