50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
சில தினங்களுக்கு முன் இணையத்தில் நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் அவர் கன்னத்தில் நான்கு விரல்களின் தடம் பதிந்திருப்பதையும், கன்னம் வீங்கியிருப்பதையும் பார்த்து பலரும் பதறிப்போனார்கள். நடிகை குஷ்புவும் அதற்கேற்றார் போல் #ஸ்டேன்ட்வித்மீ, #ஸேநோடூவைலன்ஸ், #ஸ்பீக்அப்நவ் ஆகிய ஹாஸ்டாக்குகளை போட்டிருந்தார். இதனால் பலரும் குஷ்புவுக்கு ஏதோ அநீதி நிகழ்ந்துவிட்டதாக அவரை நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அது தொடர்பில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
உண்மையில் குஷ்புவை யாரும் அடிக்கவில்லை. அவர் புதிதாக நடிக்கும் சீரியலுக்கான புரோமோஷனுக்காக தான் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். குஷ்பு, கலர்ஸ் தமிழ் சேனலுக்காக புதிதாக நடித்து வரும் சீரியல் மீரா. இதில் ஆணாதிக்க சிந்தனையுள்ள கணவரிடம் இருந்து பிரிந்து சென்று சொந்தக்காலில் ஜெயித்துக்காட்டும் பெண்ணாக குஷ்பு நடிக்கவுள்ளார். மேலும், இந்த சீரியல் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கேள்வி கேட்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.