ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகர் விஷ்ணு 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' உள்ளிட்ட சீரியல்களின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். ஜீ தமிழின் 'சத்யா' சீரியலில் அமுல் பேபி கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்கள் மனதிலும் நற்பெயரை பெற்றுள்ளார். தற்போது விஷ்ணு ஜீ தமிழின் 'சத்யா 2', கலர்ஸ் தமிழின் 'இது சொல்ல மறந்த கதை' ஆகிய இரண்டு தொடர்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த இரண்டுமே மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று டாப் ஹிட் தொடர்கள் பட்டியலில் இடம் பிடித்தது. ஆனால், தற்போது கலர்ஸ் தமிழ் சேனல் நன்றாக சென்றுகொண்டிருக்கும் 'இது சொல்ல மறந்த கதை' சீரியலை திடீரென முடித்து வைத்துள்ளது.
இதன்காரணமாக ரச்சிதா மற்றும் விஷ்ணுவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், விஷ்ணுவின் ரசிகர்களுக்கு மேலும் பேரதிர்ச்சி தரும் வகையில் 'சத்யா 2' தொடரும் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதனால் விஷ்ணுவின் ரசிகர்கள் பலரும் சம்பந்தப்பட்ட சேனல்கள் மீதான தங்களது கோபத்தை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், விஷ்ணு வேறு எந்த ப்ராஜெக்டிலாவது கமிட்டாகியுள்ளாரா எனவும் இணையதளங்களில் ஆவலாக தேடி வருகின்றனர்.