டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குமரன் தங்கராஜன். இன்ஸ்டாவில் எப்போதும் பாசிட்டிவான பதிவுகளை பதிவிட்டு வரும் குமரனுக்கு ரசிகர்கள் அதிகம். பலரும் அவரை சினிமாவுக்கு முயற்சி செய்ய சொல்லி மோட்டிவேட்டும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகரான குமரன், சினிமா நடிகை கீர்த்தி சுரேஷூடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைபார்த்து பலரும், ரசிகர்கள் குமரன் உண்மையாகவே சினிமாவுக்கு போய்விட்டாரா? என கேட்டு வருகின்றனர். மேலும், அந்த பதிவில் 'நீண்ட நாட்களுக்கு பின் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாம் அப்படியே தான் இருக்கிறோம். இன்னும் இளமையாகவும் அழகாகவும்' என கேப்ஷனிட்டு கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் கூறியுள்ளார். எனவே, இவர்கள் முன்னரே நண்பர்களா? இதற்கு முன் சேர்ந்து நடித்துள்ளார்களா? என குமரனின் கமெண்ட் பாக்ஸில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.