இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் கல்லூரி தரப்பிற்கு ஆதரவாக பிக்பாஸ் அபிராமி நிலைபாடு எடுத்துள்ளார். இதன்காரணமாக பலதரப்பினரும் அபிராமிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக மருத்துவரும் நடிகையுமான டாக்டர்.ஷர்மிளா அபிராமியின் கருத்தை விமர்சித்திருந்தார். அதேபோல மூத்த நடிகையான குட்டி பத்மினியும், அபிராமி திரைத்துறையில் இருந்ததால் அவரை ஒருவர் தொடும்போது தவறாக எந்த உணர்வையும் தராது. ஆனால், மற்ற பெண்களுக்கு அப்படியில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அபிராமி, சமூக வலைதளத்தில் குட்டி பத்மினி பேசியதை பதிவிட்டு அதற்கு கீழ், 'உலகத்தில் திரையுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்களை போலவே இருக்கமாட்டார்கள். சினிமாவில் இருந்ததால் உங்களை ஒருவர் தொடும்போது எந்த ஒரு உணர்வும் இல்லை என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இன்னொரு விஷயம். உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுனா? நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும். நாங்க பாத்துக்கறோம். நீங்க உங்க ஹெல்த்த பாருங்க' என்று பதிவிட்டுள்ளார். இதில், அபிராமி தன்னை நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் என்றும் குட்டி பத்மினியின் பிறப்பை தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். அபிராமியின் இந்த செயலை உச்சபட்ச ஆணவம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.