இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிப்பை தீவிரமாக காதலித்து வரும் கேப்ரில்லா படங்களில் தனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட கச்சிதமாக பயன்படுத்தி பெர்பார்மன்ஸ் செய்துவிடுவார். தற்போது சுந்தரி தொடரின் மூலம் சின்னதிரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள், பெண்ணுரிமை தொடர்பான விவகாரங்களில் துணிச்சலாக கருத்து சொல்லும் கேப்ரில்லா, தன் மீதான விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சில மாதங்களுக்கு முன்னர் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் செய்து, சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதை கிண்டலடித்த சில நெட்டிசன்கள் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் நடத்தி, அதற்கு ‛‛ சுருங்க போகும் தோலுக்கு ஓராயிரம் விமர்சனம். சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்'' என குறிப்பிட்டு இருந்தார். தமிழருடைய பண்பையும் ஒழுக்கத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டதாக கேப்ரில்லாவை சிலர் விமர்சித்திருந்தனர்.
அந்த கமெண்டின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட கேப்ரில்லா, 'திறமைக்கும், உடலுக்கும், சுய விருப்பத்திற்கும் வித்தியாசம் அறியாத வேடிக்கை மனிதர்கள்' என அந்நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.