இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் மாரிமுத்து. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகவும், மீம் மெட்டீரியலாகவும் இணையதளத்தில் டிரெண்டாகி வரும் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், 'திருச்செல்வத்திடம் மூன்று மணிநேரம் கதை கேட்டு தான் நடிக்கவே ஒப்புகொண்டேன். இந்த சீரியல் 1500 எபிசோடை கடக்கும் என திருச்செல்வம் கூறியிருக்கிறார். அதனால் வேறு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. வேறு வாய்ப்புகள் அமைந்தால் பார்க்கலாம். வில்லன்களை பெண்கள் ரசிப்பது ரொம்பவே ஆச்சரியம். ஆனால், இந்த சீரியலால் பெண்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது.' என்று கூறியுள்ளார். மாரிமுத்து தற்போது சினிமாவில் இந்தியன் 2, ஜெயிலர் உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.