இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அதுமுதலே அவர் நடித்து வந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யாரால் நடிக்க முடியுமென பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆதிகுணசேகரனாக பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வைரலாகி வந்தது.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள வேல ராமமூர்த்தி, 'சீரியலில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. மாரிமுத்து மறைவுக்கு பிறகு என்னிடம் சேனல் தரப்பிலிருந்து பேசினார்கள். சினிமாவில் பிசியாக நடிப்பதால் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.