மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பிக்பாஸ் வீட்டில் ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதுமுதலே சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு குரல்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்கள் என்று கூறி சிலர் வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் வனிதாவின் முகத்தில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாட்சப்பில் உரையாடிக்கொண்ட பிரதீப் ஆண்டனி வனிதாவிடம் வருத்தம் தெரிவிக்க, வனிதாவும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த வாட்சப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், ‛‛என் மனம் நிலையாக இல்லை. நான் உங்கள் மகளுக்கு எதிரானவர் அல்ல. ரெட் கார்டு விஷயத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. இப்போது அதுபற்றி பேசுவது பாதுகாப்பு இல்லை. ஷோ முடியட்டும் பிறகு பேசுகிறேன்'' என்று பிரதீப் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வனிதா, ‛‛எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு வருந்துகிறேன். உங்கள் நண்பராக உங்களிடம் பேச வேண்டும். உங்களுக்கு நான் இருக்கிறேன்.
மேலும், ‛‛பிக்பாஸில் எந்த போட்டியாளர்களுக்கும் எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ நான் இல்லை. நான் இப்படித்தான் அவர்களுடன் பேசுகிறேன். வனிதா விஜயகுமார் உங்களுக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஓய்வு எடுங்கள். ஜோவிகா மிகவும் புத்திசாலி. அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெல்ல முடியும். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை,'' என கூறி உள்ளார் பிரதீப்.