அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
பிரபல சின்னத்திரை நடிகர் பழனியப்பன் லொள்ளு சபா காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் பயணித்து வருகிறார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரில் இவர் நடித்து வரும் செல்வம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பழனியப்பன் ஒரு விருது நிகழ்வில் கலந்து கொண்ட போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஓப்பனாக பதிவிட்டுள்ளார்.
அதாவது, பழனியப்பனுக்கு அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சி நிறுவனம் விருது ஒன்றை வழங்கியுள்ளது. ஆனால், விருது வழங்கியவர்களுக்கோ பழனியப்பன் யார்? அவர் எந்த தொடரில் நடிக்கிறார்? எதற்காக அவருக்கு விருது கொடுக்கப்படுகிறது என எதையும் தெரியாமல் பெயருக்கு அழைத்து விருது கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள பழனியப்பன், 'கலைஞர்களை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள்' என காட்டமாக தனது வேதனையை பதிவு செய்துள்ளார். யார் என்ன அவார்டு கொடுத்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பெருமை பீத்தும் சில நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கலைஞனுக்கு விருது என்பது எப்பேற்பட்ட அங்கீகாரம் என்பதை பழனியப்பன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.