சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல சின்னத்திரை நடிகர் பழனியப்பன் லொள்ளு சபா காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் பயணித்து வருகிறார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரில் இவர் நடித்து வரும் செல்வம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பழனியப்பன் ஒரு விருது நிகழ்வில் கலந்து கொண்ட போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஓப்பனாக பதிவிட்டுள்ளார்.
அதாவது, பழனியப்பனுக்கு அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சி நிறுவனம் விருது ஒன்றை வழங்கியுள்ளது. ஆனால், விருது வழங்கியவர்களுக்கோ பழனியப்பன் யார்? அவர் எந்த தொடரில் நடிக்கிறார்? எதற்காக அவருக்கு விருது கொடுக்கப்படுகிறது என எதையும் தெரியாமல் பெயருக்கு அழைத்து விருது கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள பழனியப்பன், 'கலைஞர்களை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள்' என காட்டமாக தனது வேதனையை பதிவு செய்துள்ளார். யார் என்ன அவார்டு கொடுத்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பெருமை பீத்தும் சில நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கலைஞனுக்கு விருது என்பது எப்பேற்பட்ட அங்கீகாரம் என்பதை பழனியப்பன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.