வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

பிரபல சின்னத்திரை நடிகர் பழனியப்பன் லொள்ளு சபா காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் பயணித்து வருகிறார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரில் இவர் நடித்து வரும் செல்வம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பழனியப்பன் ஒரு விருது நிகழ்வில் கலந்து கொண்ட போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஓப்பனாக பதிவிட்டுள்ளார்.
அதாவது, பழனியப்பனுக்கு அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சி நிறுவனம் விருது ஒன்றை வழங்கியுள்ளது. ஆனால், விருது வழங்கியவர்களுக்கோ பழனியப்பன் யார்? அவர் எந்த தொடரில் நடிக்கிறார்? எதற்காக அவருக்கு விருது கொடுக்கப்படுகிறது என எதையும் தெரியாமல் பெயருக்கு அழைத்து விருது கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள பழனியப்பன், 'கலைஞர்களை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள்' என காட்டமாக தனது வேதனையை பதிவு செய்துள்ளார். யார் என்ன அவார்டு கொடுத்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பெருமை பீத்தும் சில நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கலைஞனுக்கு விருது என்பது எப்பேற்பட்ட அங்கீகாரம் என்பதை பழனியப்பன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.