ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரபல சின்னத்திரை நட்சத்திரம் சவுந்தர்யா நந்தகுமார். விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், பின்னர் திரைப்படங்களிலும் பாடினார். சின்னத்திரை தொடர்களிலும், கபாலி, மாஸ்டர், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதுதவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சவுந்தர்யா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடருகின்றனர். இந்நிலையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இவருக்கு ஆபாசமாகவும், கீழ்த்திரமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட்டாக தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சவுந்தர்யா, சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். அவரது கணக்கை முடக்குமாறு இன்ஸ்ட்ராகிராமிற்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இந்த தகவல்களை சவுந்தர்யா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த நபரை பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அந்த நபர் உருவாக்கக்கூடிய அனைத்து கணக்குகளையும் பிளாக் செய்து, "இந்த விருப்பத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராமுக்கு நன்றி" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.