ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் நடிகை கங்கனா தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன், அவரே இயக்கியும் உள்ளார்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு முறையில் மறைந்த பிரபல தலைவர்களை கூட உயிருடன் இருப்பது போன்றும் அவர்கள் பேசுவது போன்றும் தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் உருவத்தை செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கி அவருக்கு எதிரில் கங்கனா அமர்ந்து கொண்டு அவருடன் உரையாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கங்கனா. அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனும் அவர் உரையாடியது குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.