தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது டுவிட்டரில் நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை துணிச்சலுடன் வெளியிடுவார். இதற்காக அவர் பல மிரட்டல்கள், வீடு இடிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை சந்தித்தபோதும் தனது கருத்தை துணிச்சலாக கூறி வருகிறார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ரிஹானா டுவீட்டுக்கு பதில் தெரிவித்து கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கங்கனா வெளியிட்டிருந்த பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. கங்கனா டுவிட்டர் நிறுவன விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கங்கனாவின் பதிவுகள் நீக்கப்படுவதும், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிற ஒன்று.




