ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகை உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த மாளிகைப்புரம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த 'தேவ நந்தா' என்கிற சிறுமி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்று பிரபலமானார். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 படத்திலும் தமன்னாவின் மகளாக நடித்திருந்தவர் இவர்தான். இதைத்தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தான் நடித்துள்ள 'கு' என்கிற ஒரு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது வீட்டில் இருந்தபடி தனது யூடியூப் சேனலுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார் தேவ நந்தா. ஆனால் சோசியல் மீடியாவில் உள்ள ஒரு சிலர் அந்த பேட்டியில் இருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் பதிவிறக்கம் செய்து தேவ நந்தாவை கிண்டலடிக்கும் விதமாக வேறு சில விஷயங்களை அந்த வீடியோவுடன் இணைத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
இவர்களது செயல் தனது மகளின் மனதை நோகடிக்கும் விதமாக இருப்பதாகவும் தங்களது அனுமதியின்றி தனது மகளின் வீடியோவை இவ்வாறு தவறாக பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசாரில் தேவ நந்தாவின் தந்தை தனது மகள் மூலமாக புகார் அளித்துள்ளார்.