ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மட்டுமல்லாது குடும்ப சுற்றுப்பயணமாகவும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவதை ராம்சரண் வாடிக்கையாகவே வைத்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மனைவி உபாசனா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் உபாசனா கூறும்போது, “எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் மறக்காமல் குக்கர் ஒன்றை கையோடு கூடவே எடுத்து வந்து விட வேண்டும் என்பது ராம்சரணின் உத்தரவு. காரணம் வெளிநாட்டுக்கு சென்றாலும் தினசரி சாப்பாட்டில் அவருக்கு ஒரு இந்திய உணவாவது கட்டாயம் இருக்க வேண்டும். அதனாலேயே பெரும்பாலும் ராம்சரணின் தாயார் சில இந்திய உணவு வகைகளை ரெடிமேடாக எங்களுக்கு தயாரித்து கொடுத்து அனுப்பி விடுவார். நாங்கள் வெளிநாட்டில் ஹோட்டல்களில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டாலும் கூட தங்கி இருக்கும் இடத்தில் அவருக்கு பிடித்த ஒரு நம்ம ஊரு ஸ்பெஷல் ஒன்றையும் சமைத்து விடுவோம். அதற்காகவே வீட்டிலிருந்து கையோடு குக்கர் ஒன்றையும் எடுத்துச் சென்று விடுகிறோம்” என கூறியுள்ளார்.