தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி தயாரிக்கிறார். இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறதாம்..
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவாவுக்கு வருகை தந்த நடிகர் பாலகிருஷ்ணா சர்ப்ரைஸாக விஜய் தேவரகொண்டாவின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
தற்போது அகண்டா படத்தில் நடித்து முடித்துவிட்ட பாலகிருஷ்ணா ஓய்வுக்காக கோவா வந்தபோது, லைகர் படப்பிடிப்பு நடப்பது குறித்து கேள்விப்பட்டு அங்கு விசிட் அடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது பாலகிருஷ்ணா தனது அகண்டா' படத்திற்காக இளைஞர்களை கவர, செய்துள்ள விளம்பர யுக்திகளில் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.