தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் மாதவன் இயக்கம், நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'ராக்கெட்ரி'. இந்திய விண்வெளித் துறையின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அந்தப் படம் வெளிவந்தது.
அந்தப் படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒருவர், “'ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார். அதே சமயம் அவரது மகன் வேதாந்த் நாட்டிற்காக நீச்சலில் பதக்கங்களைப் பெறுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவை வேறொரு ரசிகர்கள் மாதவனுக்கு டேக் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மாதவன், “என் தியாகத்திற்கு தயவு செய்து அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ வேறு எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் 'ராக்கெட்ரி' சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமான வருமான வரியைப் பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுளின் அருளால், நாங்கள் அனைவருமே மிகச் சிறப்பான மற்றும் பெருமையான லாபத்தை ஈட்டியுள்ளோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் நேசத்துடன் வசிக்கிறேன்,” என 'ராக்கெட்ரி' பற்றி சந்தேகங்கள் அனைத்திற்கும் சேர்த்து பதிலளித்துள்ளார்.