இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக சிறந்த நடிப்பை அவர் வழங்கியதற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வேளையில் இப்படி அவர் மருத்துவமனையில் உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களை மட்டுமல்ல அவரை மானசீக குருநாதராக வழிபடும் திரையுலகினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அவரால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, இப்போதும் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகை ராதிகாவிற்கும் இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரான்சில் இருக்கும் ராதிகா அங்கே உள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி பாரதிராஜா விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ராதிகா, “என் இனிய டைரக்டர் பாரதிராஜா அவர்களே.. நீங்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப என்னுடைய சிறப்பு பிரார்த்தனை.. உங்களிடம் பேசுவதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.