இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான படமாக நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகிறது. இப்படத்தை ஒரு சிலர் 'பாகுபலி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் மிகக் குறைந்த நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். அது பற்றிய தகவலை பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார்.
“சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியைச் சந்தித்தேன். அவரிடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் நாங்கள் 150 நாட்களில் எடுத்த முடித்துவிட்டோம் என்றேன். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். நான் 'பிரான்க்' செய்கிறேன் என அவர் திரும்பக் கேட்டார். அதற்கு உண்மைதான் சார் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம் என்றேன். அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடிக்கக் காரணமாக இருந்த திட்டங்கள், செயல்முறை என்ன என்று அவர் ஆர்வத்துடன் கேட்டார்,” என அந்த பேட்டியில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகப் படப்பிடிப்புகளும் 600 நாட்கள் வரை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.