இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான படம் ‛புதிய பாதை'. திரையுலகில் பார்த்திபனுக்கு புதிய அடையாளத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்த படம் இது. 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கப் போகிறார் பார்த்திபன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛புதிய பாதை படம் எப்போதுமே என் மனதுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு படமாகும். அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்கப் போகிறேன். அதையடுத்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் தியாகராஜ பாகவதரின் படத்தை இயக்குவதற்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் அந்த கொலை வழக்கு குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன். இது குறித்த முழு தகவல்களை திரட்டியதும் அந்த படத்தை தொடங்குவேன். அதற்காக சில ஆண்டுகள் ஆகலாம்'' என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.