ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' வரலாற்று படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் புரமோசனுக்காக படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் நடந்த விழாவில் பேசிய மணிரத்னம் 'பாகுபலி கொடுத்த தைரியத்தால் பொன்னியின் செல்வன் உருவானது' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆர்வம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான முயற்சியும், திட்டமிடலும் என்னிடம் இல்லை. காரணம் படத்திற்கு ஆகும் பட்ஜெட். அதனால் இந்த படத்தை நான் உருவாக்குவேன் என்பது கூட எனக்குத் தெரியாது.
இந்த நிலையில் சரித்திர பின்னணியில் 'பாகுபலி' படத்தை ராஜமவுலி எடுத்தார். அந்தபடம் ஏற்படுத்திய தாக்கம் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. பொன்னியின் செல்வனை உருவாக்கும் உந்து சக்தியை கொடுத்தது. நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலியை இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத் துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன். என்றார்.