ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சூது கவ்வும் திரைப்படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், இப்போது தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான போர் தொழில் படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் அசோக் செல்வன் மார்க்கெட் இன்னும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியன் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது.
இதன்படி இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை என்கிற இடத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள் நடைபெற இருப்பதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அநேகமாக செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.