தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆத்மிகா. சமீபகாலமாக ஆன்மிகத்திலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஆத்மிகா, சமீபத்தில் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்திருக்கிறார்.
அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்கார்ந்த போது அது ஆழமானதாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு நிபந்தனையின்றி பாபாஜியை குருவாக ஏற்றுக் கொண்டேன். உலகில் உள்ள எந்த ஒரு மனிதரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பாபாஜியின் குகைக்கு சென்று தியானம் செய்து அதை அனுபவிக்க வேண்டு''ம் என்று ஆத்மிகா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.