ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய்யின் லியோ படம் நாளை(அக்., 19) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் கூறுகையில், ‛‛லியோ படம் வரவே மாஸ்டர் தான் காரணம். படத்தில் கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் அல்ல, அந்த கதாபாத்திரம். விஜய் பேசியதற்கு நானே பொறுப்பேற்கிறேன். படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. விஜய் படம் வெளியாகும்போது சிக்கல்கள் வருவது வழக்கம் தான். மாஸ்டர் படத்திற்கு கூட பிரச்னைகள் வந்தன.
ஸ்டார் நடிகர்களுடன் நான் சிக்கியதாக இல்லை. அதை எனக்கு கிடைத்த சுதந்திரமாக உணருகிறேன். லியோ எல்சியு-வா என்பது நாளை தெரிந்துவிடும். போதை பொருள் வேண்டாம் என்பதே எனது நோக்கம். அதனால் தான் படத்தில் அது தொடர்பான காட்சிகள் அதிகம் வருகின்றன. சில காட்சிகளை வன்முறை என்கிறார்கள். இதை நான் வன்முறை என்று சொல்ல மாட்டேன் ஆக் ஷன் என கூறுவேன். எனது படத்தில் பொதுவாகவே இரவு காட்சிகள் அதிகம் இருக்கும். எல்சியுவிற்கு நடிகர்களின் ஆதரவு தான் காரணம்
ரஜினி படம் எனது வழக்கமான கதையில் இருக்காது. வேறு ஒரு கதையில் இருக்கும். லியோவில் அரசியல் இல்லை. ஜெயிலர் வசூலை அது மிஞ்சுமா என தயாரிப்பாளர் தான் கவலைப்பட வேண்டும். நான் நல்ல படம் கொடுத்துள்ளேன். அனைத்து தியேட்டர் பிரச்னைகளும் இரவுக்குள் தீர்ந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.