இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனுஷ், பிரியங்கா மோகன் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை சாணி காகிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ளார். தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படமான இது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது. படத்தின் பணிகள் முடிந்து தற்போது புரமோசன் பணிகள் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் படம் பற்றி அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பதாவது: கேப்டன் மில்லர் 3 பாகங்களாக உருவாகும் விதத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாக இருப்பது இரண்டாவது பாகம்தான். இந்த கதையின் முன் பின் பாகங்கள் பின்னர் தயாராகலாம். படத்திற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து மற்ற பாகங்கள் உருவாவது பற்றி தீர்மானிக்கப்படும். இந்த படத்திற்கு பிறகு நானும், தனுசும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறோம். அது கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த பாகம் அல்ல. முற்றிலும் வேறான ஒரு கதைகளத்தில் பயணிக்க இருக்கிறோம். என்கிறார் அருண் மாதேஸ்வரன்.