ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படமும் சரி படத்தின் கதாபாத்திரங்களும் சரி ரொம்பவே 'ரா'வாக இருந்தது ரசிகர்களுக்கு பிடித்துப் போனது, படமும் வெற்றி பெற்றது. அடுத்து ஹிந்திக்கு சென்ற சந்தீப் அதே படத்தை கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்து அங்கேயும் வெற்றி பெற்றார். சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற படம் இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதே சமயம் இவரது படங்கள் பல விஷயங்களை துணிச்சலாக பேசுகிறது என்பதால் தொடர்ந்து விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரரும் அனிமல் பட தயாரிப்பாளருமான பிரணாய் வங்கா கூறும்போது, “தெலுங்கு இயக்குனர்கள் சந்தீப் வங்காவின் கதைகளின் வீரியத்தை தாங்க முடியாமல், நீங்கள் தெலுங்குக்கு ஏற்ற ஆள் அல்ல.. பாலிவுட்டிலேயே தொடர்ந்து படம் பண்ணுங்கள் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. அதேசமயம் யாரும் சொல்லத் துணியாத விஷயங்களை தைரியமாக சொல்வதால்தான் அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது என்பதையும் மறுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.