சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிக்கும் படத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு, அதேநேரம் அதே இடம், அட்டி, பகிரி, பெட்டிக்கடை, தமிழ் குடிமகன் படங்களை தயாரித்தவர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் படமாகி வருகிறது. சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி.376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டிகேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது; முழுவதும் வேறுபட்டது. அநியாயத்தை இவன் எதிர்கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும்.
திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன். சமுத்திரகனி கதையை நான்கு மணிநேரத்தில் படித்துவிட்டு பாராட்டினார். இப்படத்தை டிசம்பருக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.