ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் வெளியான மாயநதி படம் மூலம் ரசிகர்களிடம் வெளிச்சம் பெற்றவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதன் பிறகு தமிழில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதே சமயம் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர் தற்போது ஹலோ மம்மி என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் தான் இந்த படத்திற்கான தனது டப்பிங் பணியையும் முடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
மேலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. அப்படி சமீபத்தில் நடைபெற்ற உரையாடலில் ஒரு ரசிகர் அவரிடம் நீங்கள் ஏதாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா என்று ஒரு கேள்வியை வெளிப்படையாகவே கேட்டார். அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்த ஐஸ்வர்ய லட்சுமி, “இது போன்ற கேள்வியைத்தான் பலரும் கேட்கிறீர்கள். நான் மகிழ்ச்சியான சிங்கிளாக இருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னை டபுள் ஆக்க முயற்சிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.