ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் தற்போது 303 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. இதே நிறுவனம் தயாரித்து, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான பான் இந்தியா படமான 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியைத் தழுவியது. மற்றொரு படமான பாலகிருஷ்ணா நடித்த 'டாகு மகாராஜ்' படம் குறைந்த லாபத்தையே தந்தது.
'சங்கராந்திகி வஸ்துனம்' படம் பெரும் லாபத்தைக் கொடுத்ததாக சமீபத்தில் நடந்த நன்றி விழாவில் அதன் வினியோகஸ்தர்களே மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகாமல், தெலுங்கில் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.