ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நியூயார்க்கின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ், வருடம் தோறும் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் பொழுதுபோக்கு, கல்வி, வணிகம், பொருளாதாரம், விளையாட்டு, இசை, விவசாயம் என பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் பிரபலமானவர்களின் பெயர்கள் இந்த 30 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறும்.
அந்த வகையில் 2025ம் வருடத்திற்கான 30 வயதுக்கு கீழான 30 பிரபலங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. இதில் பொழுதுபோக்கு என்கிற பிரிவில் நடிகைகளில் அபர்ணா பாலமுரளி மட்டுமே இந்த வருட பிரபலமாக இடம் பிடித்துள்ளார். இவர் தவிர பாலிவுட் நடிகர் ரோகித் சரப் என்பவரும் இதே பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த வருடம் இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்த பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் அபர்ணா பாலமுரளி கடந்த வருடம் தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'ராயன்', மலையாளத்தில் நடித்த 'கிஷ்கிந்தா காண்டம்' மற்றும் 'ருத்ரம்' ஆகிய படங்களில் தனது நடிப்பில் அழுத்தமான முத்திரை பதித்திருந்தார். கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான 'மகேஷ்ஷிண்டே பிரதிகாரம்' என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமான இவர், அதன் பிறகு தமிழில் 'எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2020ல் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.