இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் போசனி கிருஷ்ண முரளி. அவரை ஆந்திர போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது போசனி, பவன் கல்யாண் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசியுள்ளார். பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கமெண்ட் செய்துள்ளார்.
ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத், கச்சிபவுலியில் உள்ள போசனி வீட்டிற்குச் சென்ற அனந்த்பூர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்துள்ளனர்.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக போசனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக போசனி மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
பவன் கல்யாணை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு எடுத்துள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து பவன் கல்யாண் பற்றி அதிகமாகக் கமெண்ட் செய்த ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.